பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
கொடைக்கானல் அருகே பூண்டியை சேர்ந்த தாமோதரன் (35). இவர் வடுகபட்டி வெள்ளைப்பூண்டு சந்தைக்கு வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு பெரியகுளம் சாலையில் நண்பர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் சக்திவேலுடன் நடந்து சென்றபோது பெரியகுளம் நோக்கி சென்ற கார் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தாமோதரன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.