போடி அருகே பயன்பாடற்ற பள்ளிக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
போடியை அடுத்துள்ள நாகலாபுரம் ஊராட்சியில் தனியார் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்குச் சொந்தமான பயன்பாடில்லாத கட்டடத்தில் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்த தகவலின்பேரில், போடி தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் அப்துல் கலாம் ஆசாத் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், கட்டடத்தின் மேற்கூரை தகரங்கள், மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திறந்தவெளியில் கட்டடம் இருப்பதால், யாரேனும் பீடி, சிகரெட் குடித்துவிட்டு வீசிவிட்டுச் சென்றதே, இந்த தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.