ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி (புதன்கிழமை)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, தே.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளர் சொ. லட்சுமி தெரிவித்துள்ளார்.