தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு வெள்ளிக்கிழமை (பிப். 22) முதல் 25-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நேர்காணல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு, தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நேர்காணல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, சென்னை கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் உத்தரவின்படி, நிர்வாக காரணங்களுக்காக இந்த நேர்காணல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர் காணல் தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.