பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் பாரதிய தொழிலாளர்கள் சங்கத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கக் கிளைத் தலைவர் வி.சசிக்குமார் தலைமை வகித்தார். சப்பானி முத்து முன்னிலை வகித்தார். கௌரவத் தலைவர் யேசுராஜ் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். சங்கப் பெயர் பலகையை மாநில செயலாளர் கே.பாலன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. புதிதாக தொடங்கப்பட்ட சங்கத்தில் 25- க்கு மேற்பட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.