மக்களவைத் தேர்தல்: தேனி மாவட்டத்தில் 18 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

தேனி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருவாய்த் துறையில் பல்வேறு நிலைகளில்

தேனி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருவாய்த் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய 18 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் உதவி மேலாளராக பணியாற்றிய செந்தில் முருகன் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் போடி வட்டாட்சியராகவும், போடி வட்டாட்சியராக பணியாற்றிய ஆர்த்தி தேனி வட்டாட்சியராகவும், தேனி வட்டாட்சியராக பணியாற்றிய சத்தியபாமா உத்தமபாளையம் வட்டாட்சியராகவும், உத்தமபாளையம் வட்டாட்சியராக பணியாற்றிய உதயாராணி முத்திரைத் தாள் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்திரைத் தாள் தனி வட்டாட்சியராக பணியாற்றிய சுந்தர்லால், பெரியகுளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், பெரியகுளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய பிரதீபா, பேரிடர் மேலாண்மைப் பிரிவு தனி வட்டாட்சியராகவும், பேரிடர் மேலாண்மைப் பிரிவு தனி வட்டாட்சியராக பணியாற்றிய செந்தில், ஆட்சியர் அலுவலகக் குற்றவியல் பிரிவு மேலாளராகவும், ஆட்சியர் அலுவலகக் குற்றவியல் பிரிவு மேலாளராக பணியாற்றிய இளங்கோ, ஆண்டிபட்டி வன நில வரித் திட்ட தனி வட்டாட்சியராகவும், ஆண்டிபட்டி வன நில வரித் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய குமார், போடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், போடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய அழகுமணி, சின்னமனூர் நகர நில வரித் திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சின்னமனூர் நகர நில வரித் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய பிரபாகர், பெரியகுளம் வட்டாட்சியராகவும், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா, ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வட்டாட்சியராகவும், ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வட்டாட்சியராக பணியாற்றிய பாலசண்முகம், ஆண்டிபட்டி வட்டாட்சியராகவும், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அர்ஜூனன், டாஸ்மாக்  உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தமபாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சுருளி மைதீன், கோட்ட கலால் அலுவலராகவும், கோட்ட கலால் அலுவலர் முருகேசன், உத்தமபாளையம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வட்டாட்சியர்கள் பணியிட மாற்றத்துக்கான உத்தரவை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ்  பிறப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com