தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.