தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், சுகாதாரப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், தனிநபர் கழிப்பறை பயன்பாடு, தனிநபர் கழிப்பறைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானிய உதவி ஆகியன குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சுகாதாரப் பொங்கல் விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், சுபாஸ் சந்திரபோஸ், முழு
சுகாதாரத் திட்ட மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.