பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். 

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். 
சுருளிப்பட்டியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி சுப்பையா. இவரது மனைவி அன்னமயில் (45), ஞாயிற்றுக்கிழமை இரவு அருகிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். 
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com