தேனியில் வெள்ளிக்கிழமை இரவு, நகராட்சி வாரச்சந்தை அருகே ஜீப் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தார்.
தேனி அஞ்சல் நிலையம் சாலை ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் சுருளிவேல் (72). இவர், தேனி நகராட்சி வாரச்சந்தை அருகே பழம் விற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கேரளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஓட்டி வந்த ஜீப்,
சுருளிவேல் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சுருளிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.