வீரபாண்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின் வாரியச் செயற்பொறியாளர் சொ. லட்சுமி தெரிவித்துள்ளார்.