தேனி

கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த பொருள்களை அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்தனர்.
கம்பம் அப்பாவு பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முருகன்(50). கம்பம் வேலப்பர் கோவில் தெருவில்  தேநீர் கடை நடத்தி வந்தார்.  இவரது மனைவி செந்தாமரைச்செல்வி(40). இவர்கள் இருவரும் கம்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தெருவில் உள்ள வாடகைக் கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கி வந்த ஓம் சக்தி மன்றத்திற்கு பொறுப்பாளர்களாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு இயங்கி வந்த மன்றத்தை இடம் மாற்றுவதற்காக, தம்பதியர் இருவரும் பொருள்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.  அங்கு வைக்கப்பட்டிருந்த இருந்த விளம்பர பதாகையை அகற்றியபோது எதிர்பாராத விதமாக அவ்வழியே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியின் மீது பதாகை உரசியதில், மின்சாரம் பாய்ந்து இருவரும்  நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர். 
தகவலறிந்த உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வீரபாண்டி, கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்  பொன்னிவளவன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தினர். மேலும் இருவரின் சடலங்களையும் மீட்டு  உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
இறந்த தம்பதிக்கு மகன் சுந்தரலிங்கம்(23), மகள் ராமப்பிரியா(19) உள்ளனர். இருவரும் 
உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து  கணவர், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT