தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், புதன்கிழமை பெரியகுளம் அருகேயுள்ள பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்து பிரசாரம் தொடங்கினார்.
அதிமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டார். அவர் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலுக்கு புதன்கிழமை காலை சென்று சுவாமிக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் ஜி.கல்லுப்பட்டியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தை இக்கோயிலில் இருந்து தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.