தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம், பதிவு செய்யப்பட்ட கட்சியான சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் அதன் மாநிலப் பொதுச் செயலர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பி. அல்லிக்கொடி(58) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.