பெரியகுளத்தில் நாளை மாவட்ட  கூடைப்பந்தாட்ட  அணி வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான

தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிக்கு, தேனி மாவட்ட ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் தேனி மாவட்டத் தலைவர் பி.சி. சிதம்பரசூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க, தேனி மாவட்ட  ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளம் பிஎஸ்டி விளையாட்டு அரங்கில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், உரிய சான்றுகளுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com