தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டிக்கு, தேனி மாவட்ட ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் தேனி மாவட்டத் தலைவர் பி.சி. சிதம்பரசூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பங்கேற்க, தேனி மாவட்ட ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு பெரியகுளம் பிஎஸ்டி விளையாட்டு அரங்கில் மார்ச் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், உரிய சான்றுகளுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.