திருச்சியில் இருந்து ஆக்ஸிஸ் வங்கி மூலம் தேனிக்கு ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப எஸ்.ஐ.எஸ்.பிராசிகியூட் நிறுவன வேன் மூலம் ரூ.60 லட்சம் கொண்டு சென்றுள்ளனர். மதுராபுரி பகுதியில் இந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர், உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்வதாக பணம் மற்றும் வேனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.