தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துகள் அதிகரிப்பு

சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-தாயில்பட்டி செல்லும் சாலையில் சுப்பிரமணியாபுரம் தனியார் கல்லூரி அருகே தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தை கடந்துதான் தினமும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு வாகனங்கள் மற்றும் இப்பகுதி கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரவேண்டும். தினமும், இச்சாலையில் 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவரும் நிலையில், தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததாலும், தெரு விளக்குகள் இல்லாததாலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
    எனவே, தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைத்து, அப்பகுதியில் தெரு விளக்குகளையும் ஏற்படுத்தி, விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com