அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலத்தின் கீழ் செல்லும் பிரதானச் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
அருப்புக்கோட்டையின் புறநகர்ப் பகுதி வழியாகச் செல்லும் மதுரை}தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் காந்தி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியில், அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழிக்கு சாலை செல்கிறது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மின் விளக்குதள் இல்லாததால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். இதைப் பயன்படுத்தி, சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. எனவே, இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நேரு நகர் குடியிருப்புவாசிகள் நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் பயனில்லை. பிரதானச் சாலையில் தெரு விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.