மத்தியில் மத நல்லிணக்க ஆட்சிதான் நடக்கிறது: அமைச்சர்

மத்தியில் மத நல்லிணக்க ஆட்சிதான் நடைபெறுகிறது என, பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் மத நல்லிணக்க ஆட்சிதான் நடைபெறுகிறது என, பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலை வீசவில்லை. வலைதான் வீசப்படுகிறது. கிராமப் பகுதிகளில் கேட்டால் மக்கள் நீதி மய்யத்தை பற்றி யாருக்கும் தெரியாது. 
கமல்ஹாசனின் கலாசாரம் இந்த தேர்தலோடு முடிந்துவிடும். 
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினி கூறும் கருத்தும் எனக்கு பிடிக்கும். முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற கருத்து பிடிக்கும். நல்ல எண்ணம் உள்ளவர்கள், நல்ல கருத்துகளை சொல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுகவினருக்குப் பிடிக்கும். இதை, முதல்வரும் ஏற்கெனவே கூறிவிட்டார். 
அமைச்சர்களுக்கு குளிர்விட்டு போயுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஜெயலலிதா இல்லாததால்தான் பிரேமலதாவுக்கு குளிர்விட்டு போயுள்ளது.
பாஜக.வால் எங்குமே இனக் கலவரமோ, மதக் கலவரமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மத நல்லிணக்க ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது.
கூட்டணி விஷயத்தில் முதல்வர், துணை முதல்வர் எடுக்கும் முடிவுக்கு அதிமுகவினர் கட்டுப்படுவோம். அதிமுக, அமமுக கூட்டணி குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு எடுப்பர். இந்த அரசு தொடர்ந்து நீடிக்கும். 40 மக்களவைத் தொகுதிகளிலும், 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com