விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் அருப்புக்கோட்டை கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அப்போது அவர், 7 அம்சக் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர் முழக்கமிட்டனர்.
பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில், சுமார் 80-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் கலந்துகொண்டனர்.