அருப்புக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
        இப்போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் அருப்புக்கோட்டை கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அப்போது அவர், 7 அம்சக் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்கள்  ஒன்றுகூடி, தமிழ்நாடு அரசு  தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர் முழக்கமிட்டனர்.
    பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில், சுமார் 80-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com