சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (நவ.17) மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை பாரைப்பட்டி, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகாசி அர்பன், சாட்சியாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
நென்மேனி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.