விருதுநகரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, தெற்கு மாவட்ட செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் சட்டப்பே ரவை உறுப்பினர் ஏஆர்ஆர். சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும், கட்சியின் தலைமைக் நிலைய பேச்சாளருமான கம்பம் செல்வேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.