விருதுநகரில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 லாரிகளில் மின்கலங்களை( பேட்டரிகளை) திருடியதாக தந்தை, மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (63). இவரது மகன் கணேஷ்குமார் (27). இவர்கள், இருவரும் சனிக்கிழமை அதிகாலை எம்ஜிஆர் சாலையில் நின்று கொண்டிருந்த 2 லாரிகளில் மின்கலங்களை திருடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பஜார் போலீஸார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் லாரிகளில் மின்கலங்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.
இது குறித்து பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.