பெரியார் பிறந்த நாள் விழா: சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

சாத்தூர், ராஜபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

சாத்தூர், ராஜபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
சாத்தூர் வடக்கு ரத வீதியில் திமுகவினர் சார்பில் நடைபெற்ற விழாவில் நகர்ச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட ஏராளாமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்குராந்தல் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் கிளைத் தலைவர் ப்ரியாகார்த்திக் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் வழக்குரைஞர் விஸ்வநாத் வரவேற்புரையாற்றினார். தங்கவேல், அசோக் ஆகியோர் பெரியார் பற்றி பேசினர். மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் நிறைவுரையாற்றினார். பின்னர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் திமுக சார்பில் பெரியாரின் பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராசா அருண்மொழி தலைமையில், மாநில பொதுக் குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார் முன்னிலையில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நவமணி, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக நகர்ச் செயலாளர் ராசா தலைமையில், மாவட்ட மாணவரணி மதியழகன், அவைத் தலைவர் சேதுஇன்பமணி, பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர துணைச் செயலாளர்கள் லிங்கம், பரமேஷ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com