விடுமுறை நாள்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்த வலியுறுத்தும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திங்கள்கிழமை விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். இதில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்வி துறை சார்பில் நீட், ஜேஇஇ தேர்வுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வகுப்பு எடுக்க வலியுறுத்துகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மனதளவில் பாதிக்கும் நிலையுள்ளது. எனவே, இப்பயிற்சி வகுப்புகளுக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.