விருதுநகர்

சாத்தூர் அருகே பைக் மீது சிற்றுந்து மோதல்: இளைஞர் சாவு

DIN

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது சிற்றுந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
   சாத்தூர் அருகே உள்ள நீராவிபட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (23). சிற்றுந்து ஓட்டுநர். இவர் புதன்கிழமை நீராவிபட்டி அருகே உள்ள கொல்லபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் நீராவிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நீராவிபட்டி அய்யனார் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த சிற்றுந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
   விபத்து குறித்து இருக்கன்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிற்றுந்து ஓட்டுநர் பெரியகொல்லபட்டியை சேர்ந்த பரமேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT