ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி, விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் சட்டப்பேரவை பொறுப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 7 பேர் நீதிமன்றம் விதித்த தண்டனைக் காலத்தை கடந்துவிட்டனர். இந்நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், 7 பேர் விடுதலை தொடர்பாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த 7 பேரை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர்.