ராஜபாளையத்தில் மைத்துனிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரிசி வியாபாரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம், பண்டிட் சுப்பராஜா தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (48). அரிசி வியாபாரியான இவர், தனது மனைவியின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகிறார்.