கே.தொட்டியப்பட்டி பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை

ராஜபாளையம் அடுத்த கே.தொட்டியபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் அடுத்த கே.தொட்டியபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்ட மின் செயற்பொறியாளர்  ராஜ்மோகன் தெரிவித்திருப்பதாவது:  ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உப மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொட்டியபட்டி மற்றும் முத்துலிங்காபுரம் இத்துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் பெறும் அனைத்துப் பகுதிகள் மற்றும்  சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகர், முதுகுடி ஆகிய பகுதிகளிலும், மின் விநியோகம் தடைபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com