விருதுநகர்

சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்

DIN

சாத்தூர் அருகே தரைப் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சாத்தூர்- தாயில்பட்டி செல்லும் சாலையில் சுப்பிரமணியாபுரம் தனியார் கல்லூரி அருகே உள்ள இத்தரை பாலம் வழியாக தினமும் பட்டாசு தொழிற்சாலை வாகனங்கள்,  பேருந்துகள், லாரி, கார்கள் மற்றும் இருசக்கரவாகனங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இத்தரைப்பாலத்தில் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை.
 மேலும் சாலை விளக்குகள் இல்லாததால் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பாலம் உள்ள பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இத்தரைப் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். பாலத்தின் மீது செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT