சாத்தூர் அருகே சனிக்கிழமை பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுசூரங்குடி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் ஒரு கிடங்கில் ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் சனிக்கிழமை கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த சாத்தூர் தாலுகா போலீஸார், சடலத்தை மீட்டனர். அப்போது விசாரணையில் உயிரிழந்தவர் புது சூரங்குடியைச் சேர்ந்த மாயாண்டி மகன் பாலமுருகன் (37) என்பது தெரிந்தது. இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்தாராம். இந்நிலையில் பெற்றோரிடமும் பாலமுருகன் தகராறில் ஈடுபட்டாராம். மேலும், வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பாலமுருகன் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அவர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக அவரது சடலத்தை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.