அருப்புக்கோட்டையில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.


அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
 இதுதொடர்பாக முகாம் ஒருங்கிணைப்பாளரும், வாஸ்து நிபுணருமான அண்ணாமலை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு கண் தொடர்பான தங்களின் பிரச்னைகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை, வழிகாட்டுதல்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com