சிவகாசி அருகே திங்கள்கிழமை தந்தையை தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (58). இவரது மகன் முத்துவேல் (28). இவர் வியாபாரம் தொடங்குவதற்கு தனது தந்தையிடம் ரூ. 3 லட்சம் கேட்டு வந்தாராம். இந்நிலையில் இது குறித்து ஏற்பட்ட தகராறில் ராஜகோபாலை முத்துவேல் தாக்கினாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர்.