சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்கினிக் கல்லூரி 37 வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் தலைவர் அ.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
முதல்வர் ஒய். அனிலெட் அன்பரசி ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.பி.ஸ்ரீனிவாசன் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இறுதியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.