விருதுநகரில் திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 26) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டுள்ளஅறிக்கை: விருதுநகரில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மாலை 4 மணிக்கு, விருதுநகரில் உள்ள கந்தசாமி திருமண மண்பத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர்கள் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். எனவே, இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.