தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் புதன்கிழமை பாராட்டினர்.
இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய பூப்பந்துப் போட்டிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று சுழற்கேடயத்தை கைப்பற்றியது. இந்த அணியில் ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவியர் 3 பேர் பங்கு பெற்றனர். இதில் 14 வயதிற்குள்பட்டோர் பிரிவில் எஸ்.அழகுலட்சுமியும், 17 வயதிற்குள்பட்டோர் பிரிவில் ஆர்.ரதிஸ்ரீ என்ற மரகதமும் முதலிடம் பிடித்துள்ளனர்.
19 வயதிற்குள்பட்டோர் பிரிவில் ஏ.காவ்யமீனா இரண்டாமிடம் பிடித்துள்ளார். இம்மாணவியர்களைப் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலம் தாளாளர் மஞ்சுளா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, என்.கே.ராம்வெங்கட் ராஜா மற்றும் ராஜஸ்ரீ, தலைமையாசிரியர் பி.ஏ.ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.