விருதுநகர்

தேசிய பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் மாணவிகளுக்கு பாராட்டு

DIN

தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் புதன்கிழமை பாராட்டினர்.
இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய பூப்பந்துப் போட்டிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று சுழற்கேடயத்தை கைப்பற்றியது. இந்த அணியில்  ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவியர் 3 பேர் பங்கு பெற்றனர். இதில் 14 வயதிற்குள்பட்டோர் பிரிவில் எஸ்.அழகுலட்சுமியும், 17 வயதிற்குள்பட்டோர் பிரிவில் ஆர்.ரதிஸ்ரீ என்ற மரகதமும் முதலிடம் பிடித்துள்ளனர். 
19 வயதிற்குள்பட்டோர் பிரிவில் ஏ.காவ்யமீனா இரண்டாமிடம் பிடித்துள்ளார். இம்மாணவியர்களைப் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா,  என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலம் தாளாளர் மஞ்சுளா,  அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,  என்.கே.ராம்வெங்கட் ராஜா மற்றும் ராஜஸ்ரீ, தலைமையாசிரியர் பி.ஏ.ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT