சத்திரபுளியங்குளம் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சத்திரபுளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சத்திரபுளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், விக்னேஷ்வரர் பூஜை, கலாகாசனம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. 
அதன்பின்னர், சனிக்கிழமை புண்யாகவாசனம், அக்கினி ஆராதனம் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றன. தொடர்ந்து, விமானங்கள் திறப்பு, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் சுவாமிகளுக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணஹூதி, தீபாராதனை நடத்தப்பட்டன.  மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அக்கினி ஆராதனம், நான்காம் கால யாகசாலை பூஜை, யாத்ராதனங்கள் நடைபெற்றன. பின்னர், சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனிதநீர் நிரப்பி பூஜை செய்யப்பட்ட கடங்களை எடுத்துக்கொண்டு, விமானக் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். 
அதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள சுவாமிகளின் சிலைகளிலும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கிராமப் பொது மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com