கிணற்றில் தவறி விழுந்த ஆலை தொழிலாளி சாவு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த ஆலை தொழிலாளி உயிரிழந்தார்.

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த ஆலை தொழிலாளி உயிரிழந்தார்.
பிஹார் மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் கமலேஷ் சுக்காலா (32). இவர், சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் உள்ள தனியார் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் ஆலை அருகேயுள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி கமலேஷ் சுக்காலா உயிரிழந்தார். 
இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com