விருதுநகரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் பறிமுதல்

மதுரை  மாவட்டம், கள்ளிக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா ராமகிருஷ்ணன் மகன் குருசாமி (41), முட்டை வியாபாரம்  

மதுரை  மாவட்டம், கள்ளிக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா ராமகிருஷ்ணன் மகன் குருசாமி (41), முட்டை வியாபாரம்  செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை விருதுநகருக்கு சரக்கு வாகனத்தில் வந்த இவர், கடைகளில் வசூல் செய்த பணத்துடன் விருதுநகர் அருகே சிவகாசி சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலைக் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கதர் கிராமத் தொழில் வாரிய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் சரக்கு வாகனத்தை  நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.  உரிய ஆவணத்தை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர். பின்னர், அத்தொகையை விருதுநகர் வட்டாட்சியர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com