பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட  கோரிக்கைளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊதிய உயர்வு, 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட  கோரிக்கைளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர் சங்கங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த போராட்டத்துக்கு, சங்க நிர்வாகிகள் சீனிவாசன், இருதயசவுரிராஜ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டப் பொறியாளர் சிவராஜ் பேசுகையில், பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவை வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டுமென்றும், அதிகாரிகள், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர். மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கில், மத்திய அரசு செயல்படுவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்வது தொடர்பான தேதி வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com