காரைக்கால் மருத்துவமனையில் 22-இல்  ஜிப்மர் மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில்  சனிக்கிழமை (செப்.22)  இருதயவியல், நரம்பியல்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில்  சனிக்கிழமை (செப்.22)  இருதயவியல், நரம்பியல்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் (பொ) ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை  வெளியிட்ட செய்திக் குறிப்பு :
 காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு முறை நடைபெறும் முகாமாக,  22-ஆம் தேதி (சனிக்கிழமை) இருதயவியல் மற்றும்  நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  முகாம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com