காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.22) இருதயவியல், நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் (பொ) ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதமிரு முறை நடைபெறும் முகாமாக, 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இருதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும்.