துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் நாளை குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை (செப். 21) குறைகள் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை (செப். 21) குறைகள் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (செப். 21)  மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்குத் தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 21 -ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகார்களை எழுத்து வடிவில் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com