மொகரம் பண்டிகையையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமைஅரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு ஆணைப்படி வெள்ளிக்கிழமை (செப்.21) மொகரம் பண்டிகையையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக சனிக்கிழமை (அக்.6) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.