விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. புஷ்ப


காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது.
இக்கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் கடந்த 9 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
நிகழ்ச்சியில் ஒன்றாக கடந்த 19 -ஆம் தேதி  திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பெருமாள் எழுந்தருளி திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் மற்றும் பிற கோயில்களின் பெருமாளுடன் இணைந்து சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது.
அடுத்த முக்கிய நிகழ்ச்சியாக 21 -ஆம் தேதி இரவு சந்திரபுஷ்கரணி என்று கூறக்கூடிய அம்மையார் குளத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளச் செய்யப்பட்டார். முன்னதாக, மூலவர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. புஷ்ப பல்லக்கு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் வீதியுலா நடைபெற்றது. புஷ்ப பல்லக்கு புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, தீர்த்தவாரி, தெப்பம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் யாகசாலை திருவாராதனமும், திவ்ய பிரபந்த சேவையும் நடத்தப்பட்டது. இரவு 10 மணியளவில் திருப்பள்ளியறை சேவை நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறுதியில்  விடையாற்றியுடன் பிரமோத்ஸவ விழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வகையறா தேவஸ்தான அறங்காவல் குழுவினர், ஸ்ரீ  நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com