செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் அண்மையில் பள்ளி பரிமாற்ற பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமையில் பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கான எதிர்கால குறிக்கோள்கள், கலாச்சாரம், பண்பாடு, தூய்மை, அன்றாட செயல்பாடுகள் குறித்து விளக்கபட்டன.
இதில், மயிலாடுதுரை தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கூடுதல் கல்விஅலுவலர் புஷ்பலதா, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் கோவிந்தராஜ், மதிவாணன், பிரம்மராஜன், பாக்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.