நாகப்பட்டினம்

சமூக சேவகருக்கு விருது

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகருக்கு நியூ ஜெருசலேம் யுனிவர்சிட்டி, சிறந்த சமூக சேவகருக்கான முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் கவிஞர் எஸ். ராதாகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமூக சேவை மற்றும் இறை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இப்பணியைப் பாராட்டி நியூ ஜெருசலேம் யுனிவர்சிட்டி சமூக சேவகருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சாமித்துரை, இந்த பட்டத்தை வழங்கினார். விருதுபெற்ற கவிஞர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT