நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக சேவகருக்கு நியூ ஜெருசலேம் யுனிவர்சிட்டி, சிறந்த சமூக சேவகருக்கான முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் கவிஞர் எஸ். ராதாகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமூக சேவை மற்றும் இறை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இப்பணியைப் பாராட்டி நியூ ஜெருசலேம் யுனிவர்சிட்டி சமூக சேவகருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சாமித்துரை, இந்த பட்டத்தை வழங்கினார். விருதுபெற்ற கவிஞர் எஸ். ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.