திருவாவடுதுறை ஆதீனத்தில் குரு பூஜை விழா: இருவருக்கு விருது

நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் இருவருக்கு விருது

நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் இருவருக்கு விருது வழங்கப்பட்டது.
திருவாவடுதுறை பெரிய பூஜை மடம், சிவப்பிரகாச தேசிகர் குரு மூர்த்தத்தில் நடைபெற்ற இப்பூஜையில், 24-ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜைகளை செய்வித்தார்.
தொடர்ந்து, மாலையில் திருமுறை விண்ணப்பம், சமய சொற்பொழிவுகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் ஆதீன கிளை மடம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் அனைவரையும் வரவேற்றார். நமச்சிவாய மூர்த்திகள் பூஜை நிறைவில் மதுரை மணி.சோமசுந்தர ஓதுவாமூர்த்திகளுக்கு தெய்வத் தமிழிசைச் செல்வர் விருதும், ஈரோடு இரா. மீனாட்சிக்கு சைவத்தமிழ் செம்மணி விருதும், தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழியையும் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீன விழா மலரை அவர் வெளியிட, காஞ்சி காமகோடி பீட மேலாளர் சுந்தரேசன் பெற்றுக்கொண்டார். நிறைவில் ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீனக் கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com