கடல்நீர் புகுந்து  நெற்பயிர்கள் நாசம்

நாகை மாவட்டம், பொறையாறு பகுதியில் கஜா புயலின் சீற்றத்தால், கடல் நீர் விவசாய விளைநிலங்களில் புகுந்ததில், நெற்பயிர்கள் நாசமாகின.

நாகை மாவட்டம், பொறையாறு பகுதியில் கஜா புயலின் சீற்றத்தால், கடல் நீர் விவசாய விளைநிலங்களில் புகுந்ததில், நெற்பயிர்கள் நாசமாகின.
தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட ராஜீவ்புரம், மாமாகுடி, காலாமாநல்லூர், பிள்ளைபெருமாள் நல்லூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில், விவசாயிகள்  500 ஏக்கருக்கு மேலாக சம்பா நடவு செய்திருந்தனர். இந்நிலையில், கஜா புயலின் சீற்றத்தால் கடல் நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால், கதிர் வரும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் கருகி நாசமாகின. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com