பள்ளியில் கல்வித் திருவிழா

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளியில் கல்வித் திருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளியில் கல்வித் திருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது.
இவ்விழாவை பள்ளி நிறுவனர் கியான்சந்த் தொடங்கிவைத்தார். இதில் நீர்நிலை பயணம், குதித்து விளையாட காற்றடைக்கப்பட்ட கோட்டை போன்ற அமைப்பு, நடனஅரங்கம், வில்லு-அம்பு விளையாட்டு, மாட்டு வண்டிப் பயணம், பலூன் விளையாட்டு, கண்ணாடியில் வரைதல், அபாகஸ், ரோபோட்டிக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேலும் சிறுதானிய உணவுகள் மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய அம்சமாக கோளரங்க விண்வெளி பயணம் எவ்வாறு இருக்கும் என்பதை விவரிக்கும் வகையில் கோளரங்க மாதிரி அமைப்பு உருவாக்கி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கோளரங்க நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் சுதேஷ்ஜெயின், மற்ற விளையாட்டுப் போட்டிகளை லிட்டில் ஏஞ்சல் பள்ளி தாளாளர் ஹர்ஷா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com