அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் உள்ள அண்ணா அரங்கில் அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் உள்ள அண்ணா அரங்கில் அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அதிமுக நகர செயலாளர் எஸ்.எம். எழிலரசு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் இரா. கிரிதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றுப் பேசினார். இதில், அதிமுக பேச்சாளர்கள் தஞ்சை மதியழகன், மாத்தூர் சேகர் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் குமார் வளர்த்து வந்த 11 ஆடுகள் மற்றும் ஒரு பசு ஆகியவை விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால், அண்மையில் உயிரிழந்தன. அவருக்கு அதிமுக சார்பில் இழப்பீடாக ரூ.1 லட்சத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com